tamilnadu

img

‘‘சுதந்திரப்’’ போராட்டங்கள்

ஒட்டாவா, ஜூன் 28- அரசுக்கெதிராக நடந்து வரும் ‘‘சுதந்திரப்’’ போராட்டங்களைக் கட்டுப்படுத்த ஏராளமான காவல்துறையினரை கனடா அரசாங்கம் குவித்து வருகிறது. ஜூலை 1 ஆம் தேதியன்று கனடா தினம் கொண்டா டப்படுகிறது. அந்த நாளன்று அரசின் கொள்கை களுக்கு எதிரான போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. கனடா தினத்தன்று பொது மக்கள் பெரிய அளவில் கூடி  கொண்டாடும் வழக்கம் இருக்கிறது. அதே நாளில்  போராட்டங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படு வதால், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை இருக்கும் என்று கனடா தலைநகர் ஒட்டாவாவின்  காவல்துறைத் தலைவர் ஸ்டீவ் பெல் தெரி வித்துள்ளார். போராட்டத்தைக் கட்டுப்படுத்து வதற்காக தலைநகர் முழுவதும் ஏராளமான காவல் துறையினரை நிறுத்தியிருப்பதாகவும், புதிய பாது காப்பு நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.